திருப்பூர், ஜூன் 27 – பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக் கையாளர்களுக்கு 4ஜி சேவையை உட னடியாக வழங்க வலியுறுத்தி பிஎஸ் என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்
. திருப்பூரில் பிஎஸ்என்எல் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக வெள்ளியன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறுவன புத் தாக்க நடவடிக்கையை விரிவுபடுத்த வேண்டும்,
ஊழியர்கள் பிரச்ச னையை உடனடியாகத் தீர்க்க வேண் டும். ஒப்பந்த ஊழியர் நிலுவை சம் பளத்தை உடனே வழங்க வேண் டும் ஆகிய கோரிக்கைகளை வலியு றுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க நிர்வாகிகள் எஸ்.சுப்பிரமணியம், குமரவேல், வாலீசன், விஸ்வநாதன் உள்பட பிஎஸ்என்எல் ஊழியர்கள் பலர் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து பங்கேற்றனர்.
கோவை
இதே கோரிக்கைகளை வலியு றுத்தி கோவை பிஎஸ்என்எல் தலைமை அலுவலக வளாகத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ஏராளமான பிஎஸ் என்எல் ஊழியர்கள் பங்கேற்றனர்.