tamilnadu

தளர்வுகள் இல்லா ஊரடங்கு : திருப்பூர் வெறிச்சோடியது

திருப்பூர், ஆக. 9 - கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவ தாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தும் நிலையில் திருப்பூர் ஆகஸ்ட் 9 அன்று முழுமையாக முடங்கி யது. ஆறாவது ஞாயிற்றுகிழமையாக திருப்பூர் மாவட் டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே திருப்பூரில் கொரோனா தொற்று பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 106 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் முழு ஊரடங்கு கடைப் பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டனர். மாவட்டம் முழுவதும் 45 சோதனைச் சாவடி கள் அமைக்கப்பட்டு, அத்தியாவசியத் தேவைகளுக் காக வெளியே வருபவர்கள் விசாரணைக்குப் பின்பே அனுமதிக்கப்பட்டனர். முக்கிய சாலைகள் அனைத் தும் காவல்துறையினரின் தடுப்புகள் வைத்து அடைக் கப்பட்டு இருந்தது. இதனால் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு எவ்வித நட மாட்டமும் இல்லாமல் முக்கிய சாலைகள் வெறிச் சோடி காணப்பட்டன.