tamilnadu

திருப்பூரில் மாநகராட்சி வாட்டர்மேன் படுகொலை

திருப்பூர், டிச.1- திருப்பூரில் மாநகராட்சி வாட்டர்மேன் படுகொலை செய்யப்பட்டு முட்புதரில் சடலமாக வீசப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரானை மேற்கொண்டு வரு கின்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் சாலை யில் உள்ள சங்கிலிப்பள்ளம் பாலம் அருகே முட்புதரில் ஆண் சடலம் முகத்தில் ரத்தகாயத்துடன் கிடந்துள்ளது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உட னடியாக தெற்கு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு தெற்கு உதவி ஆணையர் நவீன்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  இதில் கொலை செய்யப்பட்டவர் திருப்பூர் மாநகராட்சி ஊழியர் ராமச்சந்திரன் (38) என்பதும், வாட்டர் மேனாக  வேலைபார்த்து வந்ததும் தெரியவந்தது. ராமச்சந்திரனுக்கு சொந்த ஊர் கரூர் எனவும்,  பொன்னம்மாள் என்கிற மனைவி மற்றும் குழந்தையுடன் பெரிச்சிபாளையத்தில் வசித்து வந்தார். திங்கள்கிழமை அன்று அதிகாலை 4 மணிக்கு கரூ ரில் நடைபெற இருந்த திருமணத்திற்காக வீட்டில் இருந்து கிளம்பி சென்றதும் தெரிய வந்தது. இதனிடையே உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் கொலை நடந்த இடத்திற்கு அருகே உள்ள கண்காணிப்பு கேம ராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் நடந்த இந்த கொலைச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.