உடுமலை, பிப். 2- கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பிரச்சாரம் உடுமலையில் நடைபெற் றது. கொரோனா வைரஸ் சீனாவில் பிறந்து உலகெங்கும் பரவி வருகிறது. இது ஒற்றை வைரஸ் அல்ல. வைரஸ் களின் தொகுப்பாகும். இந்த வைரஸ் மனிதர்கள், விலங்குகள், பறவைகள் ஆகிய முப்பிரிவினரையும் தாக்க வல்லது. இந்த வைரஸானது காற்றின் மூலம் அதிகமாக பரவுகிறது. இந்த வைரஸானது தாக்கினால் மெலிதான காய்ச்சலுடன், இருமல், மூச்சு திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படும். இதிலிருந்து தற்காத்துக் கொள்ள தன்சுத்தம், உணவுச்சுத்தம் முக்கிய மாக கடைபிடிக்க வேண்டும். கிருமித் தொற்று ஏற்படாமல் இருக்க கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது உரிய முகமூடி அணிந்து செல்ல வேண்டும். தமிழ்நாட்டில் இந்த வைரஸ் பரவவில்லை. ஆனாலும் வரு முன் காப்பது மிகச்சிறந்ததென, உடு மலை கலிலியோ அறிவியல் கழகம், தேஜஸ் ரோட்டரி சங்கம் மற்றும் சுற் றுச்சூழல் சங்கம் ஆகியவை இணைந்து உடுமலை பகுதிகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை உடுமலை பேருந்து நிலையம், ரயில் நிலையம் மற்றும் பள்ளிகளில் விநியோகிக்கப் பட்டது. இந்நிகழ்விற்கு ரோட்டரி சங்க செயலாளர் சத்யம் உள்ளிட்ட நிர்வாகி களும், சுற்றுச்சூழல் சங்க செயலாளர் நாகராசன், உடுமலை வரலாற்று ஆய்வு நடுவ உறுப்பினர் பேராசிரியர் கண்டி முத்து உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.