tamilnadu

img

பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

அவிநாசி, ஆக.14- அவிநாசி பேரூராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவிநாசி பேரூராட்சி உட்பட்ட  கோவை சாலை, தினசரி சந்தை, சேவூர் சாலை, மேற்கு ரத வீதிகள் ஆகிய பகுதிகளில் உள்ள 25க்கும் மேற்பட்ட கடைகளில் பேரூராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் தடை செய்யப்பட்ட 250 கிலோ பிளாஸ்டிக்  பொருட்கள்  பறிமுதல் செய்தனர்.  இந்த ஆய்வில் செயல்  அலுவலர் ஈஸ்வரமூர்த்தி, உணவு பாதுகாப்பு அலுவலர் பாலமுருகன், துப்புரவு ஆய்வாளர் கருப்புச்சாமி, மேற்பார்வையாளர் பாலு, பாலன்  ஆகியோர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்து  கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.