tamilnadu

img

சம்பளம் தராத நிறுவனத்தை கண்டித்து சிஐடியு முற்றுகை போராட்டம்

தாராபுரம், செப். 23 - தாராபுரம் அருகே சம்ப ளம் தராத தனியார் நிறு வனத்தை கண்டித்து சிஐ டியு சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற் றது. தாராபுரம் அருகே குள் ளாய்பாளையத்தில் கேஈசி இண்டர்நேசனல் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத் தில் காவலாளிகளாக நாச்சி முத்து, ரஞ்சித், மயில்சாமி உள்ளிட்ட 6 பேர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் 6 பேரும் பணியில் இருந்து நின்றுவிட்டனர். இந்நிலை யில் 6 பேருக்கும் 40நாட்கள் சம்பள பாக்கி இருந்துள் ளது. இதை தொழிலாளர் கள் கேட்டபோது தனியார் நிறுவனம் தர மறுத்துவிட் டது.  இதையடுத்து சிஐடியு சார்பில் மாவட்ட துணை செயலாளர் என்.கனகராஜ் தலைமையில் நிறுவ னத்தை முற்றுகையிட்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைய டுத்து குண்டடம் காவல் துறையினர் இருதரப்பையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். இப்பேச்சு வார்த்தையில், ஒருவாரத்தில் சம்பள பாக்கியை தருவதாக தனியார் நிறு வனத்தினர் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.