புதுச்சேரி, ஆக.3- நிர்வாகத்திற்கு ஆதர வாக செயல்படும் தொழிலா ளர் நலத்துறையை கண் டித்து சிஐடியு சார்பில் புதுச்சேரியில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி அடுத்துள்ள சேதராப்பட்டுல் அமைந் துள்ள சோளி பிசியோ காலணி தயாரிக்கும் நிறுவ னத்தில் சிஐடியு சங்கம் அமைத்ததற்காக, 15 தொழி லாளர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்தது. நிர்வா கத்தின் இந்த சட்டவிரோத நடவடிக்கையை கண்டித் தும், தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய ஊதிய உயர்வு தொழிலாளர்க ளுக்கான உரிமைகளை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 90க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர். இந்நிலையில் தொழி லாளர் நலத்துறை அதிகாரி கள் முன்னிலையில் நடை பெற்ற பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொண்ட உறுதி மொழியை நிர்வாகம் அமல் படுத்தாமல் காலம் தாழ்த்தி வருகிறது.
இந்நிலையில் உடனடியாக ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படும் தொழிலாளர் நல அதிகாரிகளை கண் டித்தும் புதுச்சேரி கதிர்காமம் தொழிலாளர் நலத்துறை அலுவலகம் முன்பு போராட் டம் நடைபெற்றது. இதற்கு சிஐடியு பிரதேச தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பிரதேச செய லாளர் சீனிவாசன், நிர்வாகி கள் பிரபுராஜ், மதிவாணன், குணசேகரன், கொளஞ்சி யப்பன், ராஜ்குமார், கலிய மூர்த்தி, மது, மணிபாலன், சோலி பிசியோ சங்க நிர்வாகி கள் ரமேஷ், பச்சமுத்து உட் பட பலர் கலந்து கொண்ட னர். பின்னர் தொழிலாளர் நல இணை ஆணையர் சந்தித்து சிஐடியு தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் ஒரு வாரத்தில் இந்த பிரச்ச னைக்கு உரிய தீர்வு காணப் படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.