திருப்பூர், மார்ச் 23 – திருப்பூரில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகை யில் மார்ச் 24ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பின்னலாடை நிறு வனங்களை மூடுவதென முடிவு செய்திருப்பதாக பின்னலாடை உற்பத்தியாளர் அமைப்பினர் கூறியுள்ளனர். கொரானா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்தி கேயன் தலைமையில் தொழில் துறையினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தி யாளர்களைச் சந்தித்த திருப்பூர் ஏற் றுமதியாளர் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது: தொழிலாளர்கள் கூட்டமாகக் கூடுவதை தவிர்க்கும் வகையில் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி வரை பின்னலாடை நிறுவனங்களை அடைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார். இதற்கிணங்க பின்னலாடை நிறு வனங்களை மூடுவதாகவும், பின் னலாடை நிறுவனங்கள் சார்ந்த சிறு, குறு நிறுவனங்களும் இதனை ஆதரிக்கும் என்றும் தெரி வித்தார்.
மேலும் பின்னலாடை நிறுவனங்களில் தங்கிப் பணிபுரி யும் வட மாவட்ட, மாநில தொழிலா ளர்களை விடுதியிலேயே தங்க வைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதாகவும் கூறி னார். எனினும் இந்த ஒரு வார காலத்துக்கு வேலை இழப்பைச் சந்திக்கும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவது பற்றி அவர் தெரி விக்கவில்லை. ஆனால் மத்திய தொழிலாளர் நலத்துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள தொழில் அமைப்புகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தொழிற் சாலைகளை மூடினாலும், அங்கு வேலை செய்யும் தற்காலிகத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழி லாளர்கள் யாரையும் வேலையில் இருந்து நீக்கக்கூடாது. அவர்க ளுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காதர்பேட்டை சந்தை மூடல்
திருப்பூர் நகரில் செயல்ப டும் காதர்பேட்டை சந்தை மூடப்ப டுவதாகவும் காதர்பேட்டை வியா பாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இங் குள்ள கடைகளை மார்ச் 31ஆம் தேதி வரை மூடுவதென்று முடிவு செய்துள்ளதாகவும், இதற்கு வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் இருந்து வியாபாரிகள் திருப்பூர் உற்பத்தி ஆடைகளை மொத்தமாக கொள்மு தல் செய்து செல்லும் முக்கியமான சந்தையாக காதர்பேட்டை சந்தை உள்ளது. ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் இந்த சந்தை ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. நாட்டின் பல் வேறு பகுதிகளில் இருந்தும், வேறு மாவட்டங்களில் இருந்தும் வியா பாரிகள் இங்கு ஆடை கொள்முதல் செய்து விற்பனைக்குக் கொண்டு செல்வார்கள். சமூக விலக்கம் என்ற முறையில் கூட்டம் கூடுவ தைத் தவிர்க்கும் வகையில் இங் குள்ள பல நூறு கடைகளும் இன்று முதல் அடைக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.