tamilnadu

தனியார் அரிசி மண்டி நிர்வாகத்தை கண்டித்து சிஐடியு ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக். 15- திருப்பூரில் சம்பள உயர்வு கேட்டதற்காக பணிநீக்கம் செய்த தனியார் அரிசி மண்டி நிர்வாகத்தை கண்டித்து சிஐ டியு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் அரிசி கடை வீதியில் செயல்பட்டு வரும் தனி யார் அரிசி மண்டி ஒன்றில் 18 ஆண்டு காலமாக கணக் கராக பணியாற்றி வந்த ராமலிங்கம் என்பவர் தற்போதுள்ள கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கேட்டிருக்கிறார். இதையடுத்து எந்த ஒரு காரணமும் இன்றி அவரை நிர்வாகம் பணிநீக்கம் செய்து பழிவாங்கியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்தும், அவ ருக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை வழங்காத நிர்வாகத்தைக் கண்டித்தும் அரிசி கடை வீதியில் புதன் கிழமை சிஐடியு பொது தொழிலாளர் சங்கம் சார்பாக கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு பொதுத் தொழி லாளர் சங்கச் செயலாளர் என்.சுப்பிரமணியம், சுமைப் பணித் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சதாசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.