உடுமலை, ஜூன் 13- திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள அமராவதி அணை மற்றும் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதி களில் காவிரி நதி நீர் ஒழுங்காற்று துணை குழுவினர் வியாழனன்று ஆய்வு மேற்கொண்டனர். காவிரி நீர் மேலாண்மை ஆணை யம் மூலம் அமைக்கப்பட்ட காவிரி நதி நீர் ஒழுங்காற்று குழுவின் அறிவுறுத்தலின்படி, துணைக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக் குழுவினர் காவிரி நீர் பாயும் மாநி லங்களில் உள்ள நீர் தேக்கங்களில் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற் றத்தை கணக்கிட ஆன்லைன் மானிட்டரிங் சிஸ்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன்படி கர்நாடகம், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங் களைச் சேர்ந்த அதிகாரிகள் கொண்ட இந்த துணைக்குழுவினர் ஆய்வு நடத்தி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தர விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இந்த குழு கடந்த ஜூன் 4 ஆம் தேதி கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையையும், செவ்வா யன்று மேட்டூர் அணையையும், பவானி சாகர் அணையையும் ஆய்வு செய்தனர். இதில் அணைகளின் நீர்வரத்து மற்றும் நீர் வெளியேறும் இடங்களில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக வியாழனன்று உடுமலை அமராவதி அணை பகுதியிலும் மற்றும் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான தேனாறு, பாம்பாறு, சின்னாறு சேரும் இட மான ஜிரோ பாயிண்ட்டுக்கு சுமார் இரண்டு மணி நேரம் நடந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் அமராவதி அணை பழைய ஆயக் கட்டு வாய்க்கால், பிரதான கால் வாய் பகுதிகளிலும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் மத்திய நீர்வள ஆணைய கண்காணிப்பு பொறியா ளர் மோகன் முரளி, புதுச்சேரி பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் ,கேரள மாநில பாசன உதவி இயக்குநர் சஜ் வீவ் குமார், இந்திய வானிலை ஆய்வு மைய அறிவியலாளர் அமுதா, அமாரவதி அணை செயற்பொறியா ளர் தர்மலிங்கம், திருமூர்த்தி அணை செயற்பொறியாளர் (பொறுப்பு) முத்துச்சாமி உதவிசெயற்பொறி யாளர் சரவணன் உட்பட பொதுப் பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து கேரளாவில் உள்ள முக்கிய அணைகளை ஆய்வு செய்து வரும் ஜூலை இறுதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்திடம் சமர்ப்பிக்கப்படும் என காவிரி நதி நீர் ஒழுங்காற்று துணைக்குழுவினர் தெரிவித்தனர்.