tamilnadu

img

கேபிள் திருட்டு: பிஎஸ்என்எல் சங்க நிர்வாகி மீது பொய் வழக்கு கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன. 14 – பாண்டிச்சேரி பிஎஸ்என்எல் நிர்வாகத்தின் கீழ் கேபிள் திருடி யவர்களை விட்டுவிட்டு, பிஎஸ் என்எல் ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமான பாண்டிச்சேரி பிஎஸ் என்எல் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மெயின் தொலைபேசி  நிலையம் முன்பாக செவ்வாயன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட் டத்துக்கு கிளைச் செயலாளர் இளஞ்செல்வன் தலைமை ஏற்றார்.  மாவட்டப் பொருளாளர் விஸ்வ நாதன், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், ஒப்பந்தத் தொழிலாளர் சங்க மாநில நிர் வாகிகள் முத்துக்குமார், ரமேஷ்   ஆகியோர் கண்டன உரையாற் றினர். அதேபோல் பல்லடம் பிஎஸ்என் எல்  அலுவலகம் முன்பாக நடை பெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கிளை நிர்வாகி எம்.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இதில் கிளைச்  செயலாளர் எம்.முருகசாமி, ஓய் வூதியர் சங்கம் சார்பில் பி. கல்யாணராமன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் பங்கேற்றனர். நிறைவாக சங்க நிர்வாகி சி.முருகானந்தம் நன்றி கூறினார். 

;