திருப்பூர், டிச. 16- திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பி.ராமமூர்த்தி நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. திருப்பூர் வெள்ளியங்காடு நால் ரோடு பகுதி யில் ஞாயிறன்று, இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் மகத்தான தலைவர்களில் ஒருவரான பி.ராம மூர்த்தியின் 32ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனுசரிக்கப் பட்டது. இதில் பி.ராமமூர்த்தி உருவப்படத்திற்கு அனைவரும் செவ்வணக்கம் செலுத்தினர். மார்க்சிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.உண்ணிகிருஷ்ணன், எம்.ராஜகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சுந் தரம், மாநகரக்குழு உறுப்பினர்கள் பி.பாலன், கே.பொம்முதுரை உள்பட கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டு பி.ராமமூர்த்தி நினைவுக்குவாஞ்சலி செலுத்தினர்.