புதுச்சேரி, டிச.6- புதுவையில் பிஆர் என்று அனைவராலும் அழைக்கப் பட்ட தோழர் பி.ராமமூர்த்தி யின் 9வது ஆண்டு நினைவு நாள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கட்சி யின் மாவட்டக் குழு அலுவ லகத்திலும், முதலியார் பேட்டை இந்திய தொழிற் சங்க மைய அலுவலகத்தி லும் கடைப்பிடிக்கப்பட்டது. ஒன்றுபட்ட தென்னார்க் காடு மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினராக, புதுச்சேரி யின் ஏரியா கமிட்டி உறுப்பி னராகவும் செயல்பட்டவர். புதுச்சேரி மாவட்டக் குழு வாக உருவான காலத்தி லிருந்து தனது இறுதி நாள் வரை மாவட்டக் குழு உறுப்பி னராக செயல்பட்ட தலைவர். 1930 ஆம் ஆண்டு ஜன வரி மாதம் 4 ஆம் தேதி பிறந்தவர் தோழர் பி.ஆர். சுதந்திர போராட்ட வீரராக வும், ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரிந்த போது தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு ஐக்கியப்படுத்திக் கொண்டு ‘கம்யூனிசமே தன் உயிர் மூச்சாக’ வாழ்ந்த தலைவர். தோழர் பி.ஆர். நினைவு நாளில் நடைபெற்ற நினை வஞ்சலி நிகழ்ச்சிக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசச் செயலாளர் ஆர். ராஜாங்கம் தலைமை தாங்கி னார். மூத்த தலைவர் டி. முருகன் கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் ஏ. பெருமாள், புதுவை நகரச் செயலாளர் மதிவாணன் பிரதேச குழு உறுப்பினர் ஆ.கலிய மூர்த்தி, ஏ. சந்திரா, து. கிருஷ்ணமூர்த்தி, விஜய மூர்த்தி உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.