tamilnadu

img

சு.வெங்கடேசன் எம்.பி. முன்வைத்த 10 மாற்றங்களையும் ஏற்றது ரிசர்வ் வங்கி! மாபெரும் வெற்றி; நகைக்கடன் நிபந்தனைகள் ரத்து!

சு.வெங்கடேசன் எம்.பி. முன்வைத்த 10 மாற்றங்களையும் ஏற்றது ரிசர்வ் வங்கி! மாபெரும் வெற்றி; நகைக்கடன் நிபந்தனைகள் ரத்து!

புதுதில்லி, ஜூன் 7 - தங்க நகைக்கடன் தொடர்பான விதிமுறை கள் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முன்வைத்த  பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறை களை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எளிய - நடுத்தர மக்களுக்கு எதிராக இருந்த முக்கிய நிபந்தனைகள், அனைத்தும் ஏறக்குறையாக முழுமையாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.  இது நடைக்கடன்களை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான எளிய - நடுத்தர மக்கள், விவசாயிகள், சிறு வியாபாரிகளுக்கு நிம்மதியை அளிப்பதாக அமைந்துள்ளன. 9 நிபந்தனைகளை  விதித்த ரிசர்வ் வங்கி வங்கிகள் நகைக்கடன்கள் வழங்குவது தொடர்பாக, இந்திய ரிசர்வ் வங்கி, அண்மையில் 9 புதிய விதிமுறைகளை வெளியிட்டது. இது வரைவு விதிமுறைகள் தான்  என்று கூறிக் கொண்டே, மறுபுறத்தில் அவற்றை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளிலும் இறங்கியது. அதாவது, அடமானம் வைக்கப்படும் தங்கத்தின் மதிப்பில் 90 சதவிகிதம் வரை கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி 75 சதவிகிதம் மட்டுமே கடன்  வழங்கப்படும்; 22 காரட் அல்லது அதற்கு மேல் தரம் உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும்; நகையின் உரிமையாளர்கள் அதற்கான ரசீதை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்; ஏற்கெனவே அடமானம் வைக்கப்பட்ட நகைக்கான வட்டியை மட்டும் கட்டி, கடனைப் புதுப்பித்துக் கொள்ளும் முறை,  ரத்து செய்யப்படுகிறது. மாறாக, முழுத் தொகையையும் செலுத்தி நகையை மீட்டதற்கு பின்னரே மறு அடகுவைக்க முடியும் என்று அந்த நிபந்தனைகள் எளிய - நடுத்தர மக்களுக்கு எதிராக இருந்தன. அவர்களை அநியாய வட்டி வசூலிக்கும் கந்துவட்டிக்காரர்களை நோக்கித் தள்ளிவிடுவதாக இருந்தன. சு. வெங்கடேசன் எம்.பி.  உடனடித் தலையீடு இந்த அநியாய நிபந்தனைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட இடதுசாரி இயக்கங்கள் கண்டனம் தெரிவித்தன. நிபந்தனைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தின. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், உடனடியாக கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தில்லியில் நேரில் சந்தித்து இப்பிரச்சனை குறித்து கடிதம் அளித்து முறையிட்டார். நகைக் கடனுக்கான புதிய விதிமுறைகள் மக்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் பாதிக்கின்றன என்பதை, இந்தச் சந்திப்பின் போது, ஒன்றிய அமைச்சரிடம் சு. வெங்கடேசன் எம்.பி. விரிவாக எடுத்துரைத்தார். நடவடிக்கைக்கு உறுதியளித்த  ஒன்றிய நிதியமைச்சர் அனைத்தையும் கேட்டறிந்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இதன் மீது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அப்போது தெரிவித்தார். அதன்படியே, “எளிய நகைக் கடன்தாரர்கள் பாதிப்புக்கு ஆளாகாமல் கவனம் கொள்ளவும், ரூ. 2 லட்சம் கடனுக்கு கீழான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழியப்பட்டுள்ள நிபந்தனைகளில் இருந்து விதி விலக்கு அளிக்குமாறும், அவர்களுக்கு கடன்கள் தாமதமின்றி விரைவில் வழங்கப்பட ஆவன செய்யுமாறும், பொது வெளியில் எழுந்துள்ள கவலைகளை கணக்கில் கொண்டு விதி முறைகளை வகுக்க வேண்டும்” என்று ரிசர்வ் வங்கிக்கு  ஒன்றிய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்களை வழங்கியது. ஆர்பிஐ ஆளுநருக்கும் தனியாகக் கடிதம் இதனை ‘முதல் வெற்றி’ எனக் கூறி, வரவேற்பு தெரிவித்த சு. வெங்கடேசன் எம்.பி., விதிமுறை

புதிய விதிமுறைகள் வெளியீடு

1.     இந்த புதிய விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. அதிகபட்சமாக 2026 ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பு இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வர வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வரையறுத்துள்ளது. 2.     ரூபாய் 2.5 லட்சம் வரை கடன் பெறுபவர்களுக்கு கடனாளியின் திருப்பி செலுத்தும் திறன் பற்றிய நிபந்தனை கைவிடப்பட்டுள்ளது. 3.     2024 செப்டம்பர் 30 அன்று ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்படி மறுக்கப்பட்ட கடனை புதுப்பித்தல் (renewal) மற்றும் கூடுதல் கடன் (top up) தற்போது வழங்கப்படும். 4.     அதற்காக புதிதாக கடன் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. அதாவது கடனை புதுப்பிக்கும் போது அல்லது கூடுதல் கடன் பெறும்போது முந்தைய வழிகாட்டுதல் படி விதிக்கப்பட விருந்த தங்க பரிசீலனை (jewel appraisal) தொகை, கடன் செயல்மு றை தொகை (processing fee) எதுவும் புதிதாக விதிக்கப்படாது. 5.     நகைக்கான ரசீது கேட்கப்படாது. பழைய முறைப்படியே- கடன் வாங்குபவர்கள் ‘இந்த நகை என்னுடையது தான்’ என்று ஒரு சுய அறிவிப்பு செய்தாலே போதுமானது. 6.     ரூபாய் 2.5 லட்சம் வரை கடனுக்கு நகை மதிப்பில் 85 சதவிகிதம், 2.5 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 80 சதவிகிதம், ரூபாய் 5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகை மதிப்பில் 75 சதவிகிதம் கடன் வழங்கப்படும்.  7.     விவசாயக் கடன் மற்றும் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் அவசர கடன் வாங்குபவர்கள் எந்த நோக்கத்திற்காக கடன் வாங்குகிறார்களோ அதை உறுதி செய்யும் பொறுப்பு கடன் வழங்கும் நிறுவனங்களைச் சார்ந்தது என்ற சரத்து நீக்கப்பட்டு விட்டது. கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளியின் கணக்கில் தான் கடன் தொகையை செலுத்த வேண்டும். மூன்றாம் நபர் கணக்கிற்கு கடனை வழங்கக் கூடாது. 8.     நகைக் கடன் முழுவதுமாக செலுத்தப்பட்ட உடனே- அன்றைய தினமே நகைகள் கடனாளிகளிடம் திருப்பித் தரப்பட வேண்டும் அல்லது அதிகபட்சமாக ஏழு வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்பட வேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளைக்கும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனாளிகளுக்கு ரூபாய் 5000 இழப்பீடாக வழங்க வேண்டும். மேலும் நகையைத் தாமதமாக திருப்பி கொடுத்தால், கடனாளி, கடன் வழங்கும் நிறுவனத்திடம் வேறு இழப்பீடு கோரும் உரிமையும் உள்ளது. 9.     வங்கிகளால் விற்கப்படும் 22 கேரட் அல்லது அதற்கு மேல் தூய்மையான தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என்ற நிபந்தனை கைவிடப்பட்டது. 10. கடன் வாங்குபவர்களின் நலனை பாதிக்கும்- குறிப்பாக கடனுக்கான- நிபந்தனைகள் மற்றும் முக்கிய கடிதங்கள் அனைத்தும் அந்தந்த மாநில மொழிகளிலே அல்லது கடனாளிகள் விரும்பும் மொழியிலே இருக்கும்களை இறுதி செய்யும் போது எளிய- நடுத்தர 
மக்களை, சிறு தொழிலகங்கள் - வணிகர்களை 
- விவசாயிகளை பாதிக்கக் கூடிய எல்லா 
நிபந்தனைகளையும் மேற்கூறிய அறிவுறுத்தல் களை கணக்கில் கொண்டு ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும். கூடுதல் கடன்கள் கிடைப்பதில் தற்போது உள்ள சிரமங்களும் களையப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 
இதுதொடர்பாக, கடந்த மே 28 அன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ராவுக்கும் தனியாக ஒரு கடிதத்தை சு. வெங்கடேசன் எம்.பி. எழுதினார். புதிய நகைக் கடன் ‘நகல்’ விதிமுறைகள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்வுரிமை
யை பறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக அந்தக் கடிதத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்திருந்தார்.
சு. வெங்கடேசன் முன்வைத்த 10 மாற்றங்களும் ஏற்பு
இதற்கு ஜூன் 4 அன்று பதிலளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, “தற்போது வெளியிடப்பட்டு இருப்பது நகல் விதிமுறைகளே; உங்கள் கருத்துக்கள் கணக்கில் கொள்ளப்படும்; இதுதொடர்பான மக்களின் ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்டே இறுதி செய்யப்படும்; சிறு கடன்தாரர்கள் உள்ளிட்டோர் நலன்களும் கருத்தில் கொள்ளப்படும்” என்று சு. வெங்கடேசன் எம்.பி.யிடம் உறுதியளித்திருந்தார். இந்நிலையிலேயே, தங்க நகைக் கடன் தொடர்பாக சாமானிய மக்களுக்காக சு. வெங்கடேசன் எம்.பி. எழுப்பிய 10 கோரிக்கைகளையும் ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்டு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
வரலாற்றில் இதுவரை
இல்லாத நிகழ்வு
ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள சு. வெங்கடேசன் எம்.பி., ரிசர்வ் வங்கி தனது அறிவிப்புகளிலிருந்து பொதுவாக பின்வாங்குவதில்லை; மாற்றங்களை செய்வதில்லை என்ற நிலையில், அண்மையில் வெளியிட்ட நகல் விதிமுறைகளை அனைத்தையும் முழுமையாக ரத்துசெய்து, புதிய விதிமுறைகளை வெளியிட்டிருப்பது, “இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இதுவரை நிகழாத ஒன்றாகும்” என்று பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“தங்க நகைக்கடன் தொடர்பாக தான் வெளியிட்ட விதிமுறைகளில் நாம் கோரிய பத்து மாற்றங்களை ஏற்று புதிய விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாற்றிலேயே இது வரை நிகழாத ஒன்று. இந்த மாபெரும் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
“இனி வங்கியில் நகைக்கடன் ஆவணங்கள் அனைத்தும் தாய் மொழியிலேயே இருக்கும் என்பது இந்த வெற்றியின் மகுடமாகும்” என்றும் சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி.யின் தொடர் தலையீடுகளின் பின்னணியில் வெளியாகியிருக்கும் ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்புகள் கோடிக்கணக்கான மக்களுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளன.