tamilnadu

img

தீண்டாமை வன்கொடுமை குற்றவாளிகளை கைது செய்க சாதி ஒழிப்புக் கூட்டியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 16- கொரோனா ஊரடங்கு காலத்திலும், திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தீண் டாமை வன்கொடுமைகள் மீது மாவட்ட நிர் வாகமும், காவல்துறையும் உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியு றுத்தி, சாதி ஒழிப்புக் கூட்டியக்கத்தினர் திங்களன்று, திருப்பூர் குமரன் சிலை முன்பு தனிமனித இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், வன்கொடுமைக் குற்ற வாளிகளைக் கைது செய்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தி ஆவேச முழக்கங்களை எழுப்பினர். இதில், ஆதித்தமிழர் பேரவை சார்பில் விடு தலை செல்வம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சண்.முத்துக்குமார், தீண் டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ச.நந்தகோ பால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இதில்,  தீண்டாமை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம், திரா விடர் தளம், மக்கள் அதிகாரம், தலித் விடுத லைக் கட்சி, திராவிடர் தமிழர் கட்சி, டாக்டர் அம்பேத்கர் சட்டப் ஆதார மையம் ஆகிய கூட்டியக்கத்தினர் கலந்து கொண்டனர். பின்னர், அனைவரும் மேற்கண்ட கோரிக் கைகளை மனுவாக, மாவட்ட வருவாய் அலு வலரிடம் அளித்தனர்.

;