tamilnadu

img

அகில இந்திய பொது வேலை நிறுத்தம் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

உடுமலை, ஜன. 8- மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து புத னன்று நடைபெற்ற பொது வேலைநிறுத் தத்தின் ஒருபகுதியாக அரசு ஊழியர்கள் பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் உடு மலை வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு சங்கத்தின் வட்டக்கிளை துணை செயலாளர் நாகராஜ் தலைமை தாங்கினார். இதில்,அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலசுப்பி ரமணியன், மாவட்ட இணை செயலாளர் திலிப், வட்டக்கிளை செயலாளர் வெங்கிடு சாமி, கல்வித்துறை சங்கத்தின் அன்வர் ஹக், கல்லூரி பேராசிரியர் சங்கத்தின் சண் முகசுந்தரம் உள்ளிட்ட திரளான அரசு ஊழி யர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட னர்.
மடத்துக்குளம்
மடத்துகுளம் வட்டாட்சியர் அலுவல கத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக் கிளை துணை செயலாளர் மதன்குமார் தலைமை தாங்கினார். சாலை பணியாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அம்ச ராஜ், வட்டக்கிளை செயலாளர் முருகசாமி, பேரூராட்சி ஊழியார் சங்கத்தின் மோகன், ஓய்வு ஊதியர் சங்கத்தின் கருணாநிதி உள்ளிட்ட திரளான அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
உடுமலை
உடுமலை தலைமை அஞ்சல் துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். பின்னர் அலுவலகத்தின் முன்பு கிளை செயலாளர் ராமசுப்பி ரமணியம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தாராபுரம்
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஊழி யர் சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்க கிளை செயலாளர் பி.ராஜி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட் டன. இதில் அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்ட னர்.
அவிநாசி
அவிநாசியில் வட்டாட்சியர் அலுவல கம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ரமேஷ், ராமன், கருப்பன், பரமேஸ்வரன், சுமதி, நாகராஜ், தவமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;