திருப்பூர், பிப். 3 - மத்திய அரசு மக்களை மத அடிப்படையில் பிளவுபடுத்தும் குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிராக திருப்பூர் மாவட்டத் தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் பொது மக்களிடம் கையெழுத்து இயக் கம் நடத்தப்பட்டது. ஞாயிறன்று திருப்பூர்- காங்கே யம் கிராஸ் சிடிசி பணிமனை அரு கில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ், மார்க் சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன், புறநகர் மாவட்டத் தலைவர் ப.கோபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட் டச் செயலாளர் எம்.ரவி, மதிமுக மாநகரச் செயலாளர் சு.சிவபா லன் உள்பட முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி, தி.க., பல்வேறு முஸ்லிம்அமைப்புகளின் நிர்வா கிகள் பங்கேற்று கையெழுத்து போட்டனர். அத்துடன் பொது மக்களிடமும் கையெழுத்துப் பெற்றனர். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி சார்பில் அனைத்துப் பகுதி பொதுமக்களி டமும் பிப்.8-க்குள் கையெழுத்துப் பெறுவது என்றும் முடிவு செய் யப்பட்டுள்ளது. ஆலாம்பாடி, கல்லேரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திமுக காங்கேயம் வடக்கு ஒன்றி யச் செயலாளர் என்.எஸ்.சிதம்ப ரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் காங்கேயம் தாலுகா செய லாளர் திருவேங்கடசாமி, மதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் எம்.பி. சுப்பிரமணியம், ஆலாம்பாடி ஊராட்சிமன்றத் தலைவர் ராஜா மணி ரங்கசாமி, திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சக்தி வேல் உள்ளிட்டோர் பங்கேற்று குடியுரிமைத் திருத்தச் சட்டத் திற்கு எதிராக கையெழுத்திட்ட துடன், பொதுமக்களிடமும் கையெழுத்துப் பெற்றனர். உடுமலை உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக நடை பெற்ற கையெழுத்து இயக்கத் தில் திமுக மாவட்ட செயலா ளர் இல.பத்மநாபன், மடத்து குளம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்னண், உடுமலை நகர செயலாளர் மத்தீன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் தண்டபாணி, மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன், காங்கிரஸ் கட்சியின் ரவி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்ட னர். மடத்துகுளம் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் மடத் துகுளம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்னண், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் பன்னீர் செல் வம், தாலுகாக்குழு உறுப்பினர் எம்.எம்.வீரப்பன், என்.எஸ்.செல் வராஜ், ஆர்.வி.வடிவேல், மதிமுக நிர்வாகி நீலம்பூர் ஈஸ்வரன், விடு தலை சிறுத்தைகள் கட்சியின் சிட்டிபாபு, காங்கிரஸ் கட்சியின் சார்பில் ராஜேஸ் உள்ளிட்ட திர ளானோர் கலந்து கொண்டனர். குடிமங்கலம் ஒன்றியம், பெத பம்பட்டியில் நடைபெற்ற இயக் கத்திற்கு திமுக ஒன்றிய செயலா ளர் முருகேஸ் தலைமை தாங்கி னார். முரசொலி பாபு முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலா ளர் என்.சசிகலா, மாவட்டக்குழு உறுப்பினர் வெ.ரங்கநாதன், மதி முக சார்பில் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், காங்கிரஸ் கட்சி யின் கணேஷ், கொங்குநாடு முன் னேற்ற கழகத்தின் சுரேஷ்குமார், ஆதி தமிழர் கட்சியின் விஷ்ணு உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டு பொது மக்களிடம் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெற்றனர்.