tamilnadu

குன்னத்தூரில் வேகத்தடையால் விபத்து : நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை

திருப்பூர், ஆக. 2– திருப்பூர் ஊத்துக்குளி வட்டம் குன்னத்தூரில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடை காரணமாக தொடர் விபத்து ஏற்படுவதைத் தடுக்க உரிய நடவ டிக்கை எடுக்கும்படி மார்க்சிஸ்ட் கட்சியின் குன்னத் தூர் கிளைச் செயலாளர் ச.பன்னீர்செல்வம் கோரியுள் ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு சனியன்று அவர் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: குன்னத்தூர் பெருமாநல்லூர் சாலை மின்வாரிய அலு வலகம் அருகில் ஒரு வேகத்தடை அமைக்கப் பட்டுள்ளது.

அங்கு வேகத்தடை உள்ளதற்கான அறி விப்புக் குறியீடுகள், ஒளிரும் பட்டைகள் எதுவும் வைக்கப் படவில்லை. வேகத்தடையில் வரிக்குதிரை வர்ணம் பூசப்படவில்லை. இதன் காரணமாக வேகத்தடை இருப்பது அறியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகிறார்கள். ஏற்கனவே இங்கு காவல் துறை வைத்திருந்த வேகத்தடுப்பான்கள் அகற்றப் பட்டுவிட்டது. ஆகவே விபத்தைத் தடுக்கத் தேவை யான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு ச.பன்னீர்செல்வம் கோரியுள்ளார்.