அவிநாசி, ஆக. 22 - பெருமாநல்லூர் ஊராட் சிமன்ற அலுவலகத்தில் குடி நீர் இணைப்பு வழங்கா ததை கண்டித்து ஒரு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பெருமாநல்லூர் ஊராட்சி கொண்டத்தம்மன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தி (வயது 50). வசந்தி சாலைப் பணியாளராக வேலை செய்து வருகிறார். ஊராட்சிமன்ற அலுவல கத்திற்கு வந்த இவர், ஊராட்சி மன்ற துணைத் தலைவரிடம் கடந்த ஏழு மாதங்களாக குடிநீர் இணைப்பு குறித்து நடவ டிக்கை எடுக்கக் கோரியும் ஏன் இன்னும் அதுகுறித்து எம்முடிவும் பரிசீலிக்கப்ப டவில்லை எனவும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதற்கு துணைத் தலைவர் வேலுச் சாமி, உரிய பதிலளிக்காத தால் கையில் வைத்திருந்த பையில் இருந்து மண் ணெண்ணை பாட்டிலை எடுத்து தீக்குளிக்க முயன் றார். இதனால் பெரும் பர பரப்பு ஏற்படவே, அவரை அங்கிருந்த காவல்துறையி னர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ஒரு மாத காலத்துக்குள் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என உறுதியளித்தும், இது போன்ற தற்கொலை முயற்ச் சிகளை மேற்கொள்ளக் கூடாது என எச்சரித்தும் அனுப்பி வைத்தனர்.