பல்லடம் அருகே சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தாராபுரம் பல்லடம் சாலையில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ புத்தரச்சல் பகுதி அருகே எதிரே வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த குமரேசன், முருகன், அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களின் 3 வயது குழந்தை என 4 பேர் உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காமநாயக்கன் பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.