tamilnadu

img

நுல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி 2 நாள் வேலை நிறுத்தம்

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி இன்றும், நாளையும் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
திருப்பூரில் பின்னலாடை தொழிலில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இந்நிலையில் பனியன் உற்பத்திக்கு தேவையான மூலப் பொருளான நூல் விலை ஒரே ஆண்டில் 2 மடங்காக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ நூல் விலை ரூ.480 வரை உயர்ந்து  வரலாறு காணாத உச்ச நிலையை அடைந்துள்ளது. இதனால் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 10  லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் ஒன்றிய  அரசு நூல் மற்றும் பருத்தி பஞ்சு ஏற்றுமதி தடை செய்து அறிவிக்க வேண்டும் என கோரி இன்றும் நாளையும் பின்னலாடை உற்பத்தியாளர்களின் அனைத்து சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். 
இதன் காரணமாக திருப்பூரில் உள்ள 20 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்படுள்ளது. ரூ.10 லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளொன்றுக்கு ரூ.250 கோடி மதிப்பிலான பின்னலாடை உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்திற்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் விசைத்தறி நிறுவனங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்
 

;