திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு , மாவட்ட ஆட்சித் தலைவர் ம. ப.சிவன் அருள் தலைமையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு வணிக வரிகள் துறை அமைச்சர் கே. சி. வீரமணி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். சட்டமன்ற உறுப்பினர் அ. செ. வில்வநாதன் முன்னிலை வகித்தார். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மரு. யாஸ்மின் வரவேற்றார். முதன்மை மருத்துவர் கென்னடி நன்றி கூறினார்.