tamilnadu

மின் உற்பத்தி தொடங்கிய 17 நாட்களில் கூடங்குளம் முதல் அணுஉலை மீண்டும் நிறுத்தம்

திருநெல்வேலி, ஜூன் 6-மின் உற்பத்தி தொடங்கிய 17 நாட்களில் கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணு உலை வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன், தலா ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள்அமைக்கப்பட்டு உள்ளன. இதில்முதலாவது அணு உலையில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர்மாதம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர் கடந்த 2014ம்ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி நள்ளிரவு முதல் வணிக ரீதியிலான மின்உற்பத்தி தொடங்கி, மத்திய மின்தொகுப்பில் இணைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.ஆனால் பல்வேறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக முதலாவது அணு உலையில் மின் உற்பத்தி அடிக்கடி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19-ம் தேதி முதலாவது அணு உலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காகவும், எரிபொருட்கள் நிரப்பும்பணிக்காகவும் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு கட்ட பரிசோதனைகள் நடந்தன. தொடர்ந்து முதலாவது அணு உலையில் கடந்த மாதம் 18-ம் தேதி நள்ளிரவு 12.10 மணிக்கு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர் அங்கு மின் உற்பத்தி படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 970 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது. இந்நிலையில் மின் உற்பத்தி தொடங்கிய 17 நாட்களில் மீண்டும் செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணிக்கு முதலாவது அணு உலையில் உள்ள வால்வில் ஏற்பட்ட பழுது காரணமாக, மின் உற்பத்தி திடீரென நிறுத்தப்பட்டது. இதையடுத்து அந்த பழுதை சரி செய்யும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர். பழுதை சரி செய்து, இன்னும் ஓரிருநாட்களில் மின் உற்பத்தி தொடங்கப் படும் என்று அணுமின் நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. கூடங்குளம் அணுமின் நிலைய2-வது அணு உலையில் 1000 மெகா வாட் மின் உற்பத்தி செய்ய வேண்டிய நிலையில் தொடர்ந்து அங்கு குறைந்த அளவே மின்உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. புதன்கிழமை காலை 575 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

;