tamilnadu

மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

திருநெல்வேலி, மே 6- நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக 5000 ரூபாய் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி மே 7 அன்று அனைத்து தாலுகா அலுவ லகங்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. அத னையொட்டி தயாரிப்பு கூட்டம் வீரவநல்லூர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற் றது. ரவி தலைமை வகித்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட நிர்வாகி கற்பகம், சிஐடியு தலைவர் எஸ்.கே. பழனிச்சாமி மற்றும் பாலு, பட்டமுத்து உள்பட 25 பேர் கலந்து கொண்டனர்.