திருநெல்வேலி:
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. சிஐடியு கட்டுமான தொழிலாளர் நல சங்க தொழிலாளர்களுக்கு, தொழிலாளர் துறை உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன், கட்டுமான தொழிலாளர் நல சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவிச்்சந்திரன், தலைவர் சுரேஷ், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மணிகண்டன், ராஜன், கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கசமுத்து, லெனின், மோகன், சங்கரநாராயணன், ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.