திருநெல்வேலி, ஜூன் 23- மத்திய அரசு பெட்ரோல்-டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்ப வேண்டும். ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். வாக னங்களுக்கான எப்.சி மற்றும் இன்சூ ரன்ஸ் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். பண்டு கட்டுவதற்கு ஒரு வருட காலம் நீட்டிப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கி ழமை நெல்லை வண்ணாரப்பேட்டையில் சிஐ டியு ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவ ட்டத் தலைவர் டி.காமராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.வேல்முருகன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். ஆட்டோ-ஓட்டுநர் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஆர்.முருகன், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கோரிக் கையை விளக்கி பேசினர். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எஸ். பெருமாள் நிறைவுரையாற்றினார். ஆட்டோக் களை கயிறு கட்டி இழுத்து ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
முக்கூடல்
முக்கூடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு சிஐடியு நிர்வாகி கே.மாரிச்செல்வம் தலைமை வகித்தார். போராட்டத்தில் முன்னாள் ஆட்டோ ஓட்டுநர் சங்க மாவட்டத் தலைவர் தி.சந்திரசேகர், சிஐடியு அருணாச்ச லம் மற்றும் வேன் ஸ்டாண்ட் தலைவர்கள் எம். ராஜரத்தினம், வி.ஆறுமுகம், ஆர்.மோகன் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் பங்கேற்ற னர்.