திருநெல்வேலி, அக்.17- நெல்லை நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிரு ஷ்ணன் ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், நாட்டில் பொதுத்துறை அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறையையும் பாஜக அரசு விடவில்லை. அதையும் தனியாருக்கு தாரைவார்க்க உள்ளனர். மோடி மற்றும் எடப்பாடி சேர்ந்த கூட்டணி வெற்றி பெற முடியாது. அதிமுக என்றைக் காவது மத்திய அரசை கண்டித்து பேசியது உண்டா? நீட்டை எதிர்த்தார் களா? மாநிலத்திற்கு தேவையான நிதியை முறையாக பெற்றார்களா? தேசிய புலனாய்வு என்ற சட்டத்தை மத்திய அரசு திருத்தம் செய்த போது அதை அதை எதிர்க்கவில்லை. தமிழ கத்தில் எடப்பாடி அரசு அப்புறப் படுத்தப்பட வேண்டும். இந்த இடைத் தேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய தொகுதிகளில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். அதோடு அக்.23 ஆம் தேதி ராதா புரம் தொகுதியில் தீர்ப்பு வெளிவர உள்ளது. இந்த மூன்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று திமுகவுக்கு வலுசேர்க்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்தப் பிரச்சாரத்தில் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்ல கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிபி.ஐ மாவட்டச் செய லாளர் காசி விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வி.கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்ரீராம், நாங்குநேரி தாலுகா செயலா ளர் முருகன், மாவட்டக் குழு உறுப் பினர் சிவசாமி, நடராஜன், பூலுடை யார், கல்யாணி குமார் மற்றும் காங்கிரஸ், திமுக, மதிமுக, சிபிஐ கட்சி களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.