tamilnadu

பாவூர்சத்திரத்தில் சிஐடியு அமைப்பு தின விழா

திருநெல்வேலி,  ஜூன் 1- சிஐடியுவின் 50ஆண்டு பொன்விழா நிறைவு அமைப்பு தின கருத்திரங் கம் மேதின கொடியேற்று விழா பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட இணை செய லாளர் ஆரியமுல்லை தலைமை தாங்கினார், மேதின கொடியை சிஐடியு மூத்த தலைவர் ராஜாங்கம்  ஏற்றிவைத்து கருத்துரை யாற்றினார். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கணபதி,சி.ஐ.டி.யு மாவட் டத் தலைவர் வேல்முரு கன் மற்றும் மாவட்ட  இணைச் செயலாளர் மணி கண்டன், சிபிஎம் கீழப்பாவூர் ஓன்றிய செயலாளர் தங்கம், தென்காசி வட்டாரத் தலைவர் லெனின் குமார், செங்கோட்டை வட்டா ரத் தலைவர் வன்னிய பெருமாள், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கிருஷ்ணன் Sமாரியப்பன் மாகராஜன் Sகற்பகவல்லி லெட்சுமி ரத்தினம் ஆட்டோ சங்க மாவட்ட நிர்வாகி அற்புத ஜெகன் பீடி சங்க மாவட்ட நிர்வாகிகள் அய்யாத்துரை நாகரத்தினம் மாரியப்பன் அருணாசலம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.