திருநெல்வேலி,ஜூலை 5- நெல்லை மாநகரம் மேலப்பாளையம் பகுதியில் கொரோனா நோய் தடுப்புப் பணியில் ஹோமியோபதி மாத்திரை களை பொது மக்களுக்கு இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் வழங்கினர். நெல்லையில் தமிழ்நாடு ஹோமியோ மருத்துவக்கவுன்சிலைச் சேர்ந்த மருத்து வர் துரைராஜ் தலைமையில் வாலிபர் சங்க பாளை வட்டத்தலைவர் ஸ்ரீராம், செயலாளர் கருணா, மாரியப்பன், பாசில், ஏ.வி.தட்சிணாமூர்த்தி, ஜி.மீனாட்சிசுந்த ரம் ஆகியோர் பொதுமக்களுக்கு மாத்தி ரைகளை வழங்கினர். நெல்லை மேலப் பாளையம், குறிச்சி கோவில் தெரு விலும் வழங்கப்பட்டது.