tamilnadu

மணல் கடத்திய 5 பேர் கைது

திருநெல்வேலி, மார்ச் 7- நெல்லை அருகே உள்ள சீதபற்பநல்லூர் போலீசார் வெள்ளியன்று ரோந்து சென்றனர். அப்போது கல்லத்தி குளம் பகுதியில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் 4 பேர் டிராக்ட ரில் அனுமதி இல்லாமல் மணல் திருடியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் மணல் திருடிய கண்ணன் (42), கருப்ப சாமி (24), சுரேஷ் (19), பேச்சிகுட்டி (20) ஆகிய 4 பேரையும்  கைது செய்தனர்.  இவர்கள் மணல் அள்ளிய டிராக்டர் மற்றும்  ஜே.சி.பி. எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுபோன்று பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர  மூர்த்தி ரோந்து சென்ற போது பழையபேட்டையில் டிப்பர்  லாரியில் 2 பேர் செம்மணல் கடத்தி சென்றனர். உடனடியாக  போலீசார் விரைந்து சென்று டிப்பர் லாரியை மணலுடன் பறி முதல் செய்தனர். லாரி ஓட்நரான பழைய பேட்டையை சேர்ந்த  தினேஷ் (28) என்பவரை கைது செய்தனர். லாரியில் இருந்து  தப்பிய மகாராசனை போலீசார் தேடி வருகின்றனர்.

;