சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நெல்லை மாவட்ட தோழர் அசோக்கின் முதலாமாண்டு நினைவு நாளையொட்டி, வேளச்சேரி பகுதி சார்பாக 150 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. பகுதிச் செயலாளர் திவாகர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொருட்களை தென்சென்னை மாவட்டத் தலைவர் எம்.ஆர். சுரேஷ் வழங்கினார். பகுதி தலைவர் சரவணன், நிர்வாகிகள் குமார், ரகு, முன்னாள் பகுதிச் செயலாளர் ரபீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.