திருநெல்வேலி, மே 7- கொரோனா ஊரடங்கு காரண மாக வேலை இல்லாமல் வறுமையில் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.5,000 நிதியுதவி வழங்க கோரி வியாழ னன்று தமிழகம் முழுவதும் அனைத்துவகை மாற்றுத்திறனா ளிகள் உரிமைகள் நலச் சங்கம் சார்பில் அரசு அலுவலங்கள் முன்பு தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் 5 இடங்களில் போ ராட்டம் நடைபெற்றது. நான்குநே ரியில் முருகன், கணேசன், இசக்கி யப்பன் ஆகியோர் தலைமையிலும், சேரை தாலுகாவில் இரண்டு இடங்க ளில் நடைபெற்ற போராட்டத்தை மா வட்டப் பொறுப்பாளர் கற்பகம், வீரவ நல்லூர் முன்னாள் பேரூராட்சி தலை வர் எஸ்.கே.பழனிச்சாமி, ரவி, பட்ட முத்து, ராஜா, ராம்சேகர், சின்ன துரை ஆகியோர் வழிநடத்தினர். 25 பெண்கள் உட்பட 80 பேர் பங்கேற்றனர்.
சேரை தாசில்தார், துணை தாசில்தார், வீரை பேரூராட்சி செயல் அலு வலர் பேச்சுவார்த்தை நடத்தி மனு வை பெற்று கொண்டனர். சேரையில் நடைபெற்ற போரா ட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செல்வசுந்தரி தலைமை வகித்தார். சங்கரசுப்பு. இசக்கிமுத்து உள்பட 15 பேர் கலந்து கொண்டனர். தாசில்தாரி டம் நேரடியாக மனு கொடுக்கப்பட்டது. வி.கே..புரத்தில் நடைபெற்ற போரா ட்டத்தில் அகஸ்தியராஜன் தலைமை வகித்தார். வெங்கலபொட்டலில் கன்னிமரியாள் தலைமை வகித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டம் கோ வில்பட்டி இனாம்மணியாச்சி பகுதி யில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனிடையே மாற்றுத்திறனாளிக ளின் கோரிக்கைகள் அடங்கிய மனு க்களை பெற்ற கோவில்பட்டி வட்டா ட்சியர் நிதியுதவி வழங்க உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதிய ளித்தார். இனாம்மணியாச்சி கிளை செயலாளர் அழகுசுப்பு, ஒன்றியக்குழு உறுப்பினர் சின்னதம்பி உட்பட 30-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.