tamilnadu

img

தோழர் ராஜாங்கம் இறுதி நிகழ்ச்சி தலைவர்கள் அஞ்சலி

திருநெல்வேலி, ஜூலை 22- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சிஐடியு தொழிற்சங்கத்தின் மூத்த தலைவரும், சமரசம் இல்லா போராளியுமான தோழர் ராஜாங்கம் செவ்வாயன்று காலமா னார். அவரின் உடல் அன்று மாலை 3.30 மணி அளவில் நெல்லை சந்திப்பு ஷிபா மருத்துவ மனையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு மாலை 5 மணி அளவில் விகே புதூர் தாலுகா நாச்சியார்புரத்திலுள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.  இறுதி நிகழ்ச்சியில் சிஐடியு அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், சிஐடியு மாவட்ட தலைவர் எம்.வேல்முருகன், மாவட்ட செயலாளர் ஆர்.மோகன், பொருளாளர் எஸ்.பெருமாள், கட்சியின் ஆலங்குளம் விகே புதூர் தாலுகா செயலாளர் குணசீலன், பாப்பாக்குடி ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், சிஐடியு நிர்வாகி காமராஜ், மகாவிஷ்ணு மற்றும் போக்குவரத்து சங்கத்தினர், ஆலங்குளம் வி.கே.புதூர் தாலுகா மூத்த தோழர்  சங்கரன், ராமசாமி, மாரியப்பன், நல்லையா, வெற்றிவேல்,  மாரியப்பன், ராதாகிருஷ்ணன், அருணா சலம், பரமசிவன் மற்றும் சிஐடியு பீடி சங்கத்தி னர், விவசாய சங்கத்தினர், பாப்பாகுடி  ஒன்றி யக்குழுவினர், லிகாய் சங்க குழந்தைவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.  தொடர்ந்து அங்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

;