tamilnadu

img

நெல்லையில் தோழர் என். சங்கரய்யா சிலை

திருநெல்வேலி, மார்ச் 19 - விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என். சங்கரய்யா அவர்களின் மார்பளவு சிலை திறப்பு விழா நெல்லை மாவட் டம் பாளையங்கோட்டையில் திங்கட் கிழமையன்று நடைபெற்றது.  

பாளையங்கோட்டை தியாகராஜ நகர் சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நுண்கலை அறிஞர் சென்னை ஓவியக்கல்லூரி முன் னாள் முதல்வர் சந்ரு தலைமை வகித்தார். மூங்கில்வனம் ராஜேஷ் வரவேற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், தோழர் என். சங்கரய்யா சிலையை திறந்து வைத்துப் பேசினார். நிகழ்ச்சி யில் மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்டச் செயலாளர்  க. ஸ்ரீராம், எழுத்தாளர் இரா. நாறும்பூநாதன், வரலாற்று ஆய்வாளர் மணிக் குமார், டாக்டர் ராமகுரு, பேராசிரியர் பொன்ராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிலை வடிவமைப்பாளர் ராஜ பிரபு உட்பட பலர் கலந்து கொண்ட னர். குருவனம் செயலாளர் நல்லை யா நன்றி கூறினார்.