திருநெல்வேலி, மே 23- தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக் கூடாது, வேலை நேரம் எட்டு மணி நேரம் என்பதை 12 மணி நேரமாக உயர்த்தக் கூடாது, மின் துறையை தனியாருக்கு தாரைவார்க்க கூடாது, விருப்பமுள்ள வெளி மாநில தொழிலாளிகளை சொந்த ஊருக்கு சென்றுவிட ஏற்பாடு செய்ய வேண்டும், ஊரடங்கு காரணமாக வரு மானம் இன்றி தவிக்கும் அனைவருக்கும் மாதம் ரூ.7,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி பாளையங்கோட்டை மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை மாலை மின்வாரிய சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. சம்மேளனம் திட்ட செய லாளர் பெருமாள்சாமி தலைமை வகித்தார். சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநிலச் செயலா ளர் வண்ணமுத்து, தொமுச நிர்வாகி நச்சினார்க்கினியன், ஐக்கிய சங்க தென்கரை மகா ராஜன், மின் ஊழியர் காங்கிரஸ் முத்துக்குமார் மற்றும் பல்வேறு சங்க ங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் பேசி னர். மின் ஊழியர் மத்திய அமைப்பு திட்ட தலைவர் பீர்முகம்மது ஷா நிறைவு ரையாற்றினார்.