திருச்சிராப்பள்ளி, ஜூன் 20- அனைத்து மத்திய தொழிற்சங்கம், வங்கி, எல்ஐசி, ஆசிரியர், அரசு ஊழியர், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் ஆலோ சனை கூட்டம் வெள்ளியன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய அரசு, மக்கள், தொழிலாளர் விரோத கொள்கைகளை கைவிட வேண்டும். தனியார்மயத்தை கைவிட வேண்டும். அரசு ஊழியர்க ளிடம் பறிக்கப்பட்ட பலன்களை திரும்ப வழங்க வேண்டும் என்பன உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜுலை 3 அன்று திருச்சியில் 300 இடங்க ளில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. ஆலோசனை கூட்டத்தில் சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கரா ஜன், மாவட்டப் பொருளாளர் ராஜேந்தி ரன், தொமுச மாவட்ட கவுன்சில் தலை வர் குணசேகரன், செல்வராஜ், ஐஎன்டி யுசி மாவட்டத் தலைவர் துரைராஜ், மாத வன், ஏஐடியுசி மாவட்ட தலைவர் சுரேஷ், நடராஜன், எச்எம்எஸ் மாவட்டச் செய லாளர் ஜான்சன், ராஜமாணிக்கம், ஏஐசி சிடியு மாநிலச் செயலாளர் தேசிகன், எல்எல்எப் மாநிலச் செயலாளர் பிர பாகரன், வங்கி ராமராஜ், அரசு ஊழியர் சங்க பழனிச்சாமி, சுந்தர்ராஜன், பிஎஸ்என்எல் அஸ்லம்பாஷா, எல்ஐசி ஜோன்ஸ், பன்னீர்செல்வம், லிகாய் வேலுச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.