tamilnadu

img

அருந்ததிராயின் புத்தகத்தை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க கோரி மனு...

திருநெல்வேலி:
நெல்லையில் கல்வி உரிமைபாதுகாப்பு கூட்டியக்கம், அனைத்துகட்சிகள் சார்பில் பல்கலைக் கழகதுணைவேந்தரிடம் மனு அளிக்கப்பட்டது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுகலை ஆங்கிலம் மூன்றாம் பருவத்தில் கடந்தமூன்றாண்டுகளாக மாணவர்கள் படித்து வந்த, உலகப்புகழ் பெற்றஎழுத்தாளர் அருந்ததிராயின் “walking with the Comrades” என்ற நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது ஜனநாயக, சட்ட நெறிமுறைகளுக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் எதிரானது என்றும், பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான இவ்வறிவிப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவும் கருதுகிறோம். உலகளவில் புகழ்பெற்ற புக்கர் பரிசு பெற்றவரும், பல்வேறு நாடுகளிலும் முற் போக்குக் கருத்துகளை பரப்பி வருபவருமான எழுத்தாளர் அருந்ததி ராயின் இப்புத்தகம் உலகளவில் தலைசிறந்த பென்குயின் பதிப்பகத்தின் படைப்பாகும். மாணவர் களின் சமூக, பொருளாதார, அரசியல் பொறுப்புணர்வையும் இலக்கியத்திறனையும் கூர்தீட்டும் வகையில் அமைந்திருக்கிற இப்புத்தகம்இந்தியா உட்பட எந்தவொரு நாட்டிலும் தடை செய்யப்படவில்லை. எனவே நீக்கப்பட்ட இப்புத்தகத்தை உடனடியாக தொடர்ந்து பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்யுமாறு கல்வி உரிமை பாதுகாப்புக்கூட்டியக்கம் உறுதியாகக் கேட்டுக்கொள்கிறது என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர்கே.ஜி.பாஸ்கரன், சிபிஎம் தாலுகா செயலாளர் பா.வரகுணன்,திமுக மத்திய மாவட்டச் செயலாளர் அப் துல் வகாப்,நெல்லை எம்.எல்.ஏலெட்சுமணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கரிசல் சுரேஷ் ,தமிழக முஸ்லீம்முன்னேற்ற கழக மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன், ஆதித்தமிழர் பேரவை கலைக்கண்ணன் உட் பட அனைத்து கட்சி, அமைப்பு, இயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வழங்கினர்.