tamilnadu

img

பாளையங்கோட்டை நீதிமன்றத்திற்கு முன் ஒருவர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி,டிசம்பர்.20- நெல்லையில் நீதிமன்ற வாசலில் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் முன் இன்று காலை கொலை முயற்சி ஆஜராக வந்த மாயாண்டி என்ற இளைஞர் 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
கொலை செய்துவிட்டுத் தப்பியோட முயன்ற ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரை போலீசார் உடனே கைது செய்த நிலையில் தற்போது மேலும் 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.