tamilnadu

நெல்லை-தென்காசியில் 145 இடங்களில் அகில இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, ஜூன் 17- பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டம் 145 இடங்களில்  நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் 895பேர் பங்கேற்றனர். பாளை தாலுகா கமிட்டியில் 6 இடங்களிலும், நெல்லை கமிட்டியில் 4 இடங்களிலும், சேரன்மகாதேவியில் 9 இடங்களிலும், செங்கோட்டையில் 15 இடங்களிலும், திருவேங்கடத்தில் 7 இடங்களிலும்,ஆலங்குளத்தில் 14 இடங்களிலும்,பாப்பாகுடியில்13 இடங்களிலும்,புளியங்குடியில்7 இடங்களிலும், கீழப்பாவூரில் 8 இடங்களிலும், அம்பாசமுத்திரத்தில் 4 இடங்களிலும், நாங்குநேரியில் 3 இடங்களிலும், கடையத்தில் 4 இடங்களிலும், சங்கரன்கோவிலில் 21 இடங்களிலும், வாசுதேவநல்லூரில் 5 இடங்களிலும்,  தென்காசியில் 25 இடங்களிலும் என மொத்தம் திருநெல்வேலி-தென்காசி மாவட்டங்களில் 15 மையங்களில் 140 இடங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 895 பேர் பங்கேற்றுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் நன்றி தெரிவித்துள்ளார்.

;