திருச்சிராப்பள்ளி, ஆக.16- திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியம் வடக்கிப்பட்டியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க புறநகர் மாவட்டத் தலைவர் பாலு தலைமை வகித்தார். முன்னாள் வட்டச் செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றினார். புதிய கிளையின் தலைவராக ஜி.கலைவாணன், செயலாளராக ஏ.ஆனந்த், பொருளாளராக பி.பால சுப்ரமணி, துணைத் தலைவர்களாக எம்.தமிழழகன், ஆர்.ஆனந்த், துணைச் செயலாளர்களாக பி.பெரியசாமி, பி.அலெக்ஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.