புதுக்கோட்டை, மே 13-புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டாரப் பகுதிகளில் நிலத்தடிநீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருவதால் விவசாயத்திற் கும், குடிதண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. ஆயிரம் அடி ஆழத்திற்கு கீழே ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. இப்பகுதி நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்க அரசு எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் கொத்தமங்கலம் இளைஞர்கள் நிலத்தடி நீரை பாதுகாக்க ஆலோசனை செய்தனர். முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் கட்டிய அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்லும் கால்வாய்கள் பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் மண் சரிந்து கிடந்தது. பருவமழை தொடங்கும் முன்பாக இந்த அணைக்கட்டில் இருந்து பிடாரி கோயில் பெரிய குளத்திற்கு செல்லும் கால்வாயை சீரமைக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கினர். தொடர்ந்து பெரிய குளம் கரையைபலப்படுத்தி தண்ணீரை தேக்குவதுடன் கிராமத்தில் உள்ள மற்ற குளங் கள், நீர்நிலைகளுக்கு வரும் வரத்து வாய்க்கால்கள், குளங்களை தூர்வாரி கரையை பலப்படுத்தும் பணியை இளைஞர்கள் சொந்த செலவில் தொடங்கியுள்ளனர். இளைஞர்களின் இப்பணியை அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் பாராட்டினர்.