tamilnadu

img

எழுத்தாளர் கா.சு.வேலயுதத்திற்கு ‘நாஞ்சில் நாடன்’ விருது

கோவை, பிப். 3- கோவை சிறுவாணி வாசகர் மையம் சார்பில் பத்திரி கையாளரும், எழுத்தாளருமான கா.சு.வேலாயுதத்திற்கு ‘நாஞ்சில் நாடன்’ விருது வழங்கப்பட்டது. சிறுவாணி வாசகர் மையம் சார்பில் கலை, இலக்கியம், சமூகம் உள்ளிட்ட துறைகளில் நேர்மையாகவும், செம்மை யாகவும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பெய ரில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான விருது செய்தியாளரும், எழுத்தாளருமான கா.சு.வேலாயுதத்திற்கு ஞாயிறன்று வழங்கப்பட்டது. கோவையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர் கண.சிற்சபேசன் ‘நாஞ்சில் நாடன்’ விருது, ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை கா.சு.வேலாயுதத்திற்கு வழங்கினார்.  முன்னதாக, விஜயா பதிப்ப கம் உரிமையாளர் மு.வேலாயுதம், எழுத்தாளர் வ.ஸ்ரீநிவா சன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘ராக்’ அமைப்பு செயலர் ஆர்.ரவீந்திரன் விருது பற்றி அறிமுகம் செய்தார். விழா ஏற்பாடுகளை சிறுவாணி வாசகர் மையத் தலைவர் தி.சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இவ்விழாவில் திரளா னோர் கலந்து கொண்டனர்.