tamilnadu

img

உலக காகிதப் பை தின விழா

கரூர், ஜூலை 13-  கரூர் பரணி பார்க் பள்ளியில், உலக காகிதப்பை தின விழா நடைபெற்றது. நெகிழியை மறுப்போம், பசுமை உலகு சமைப்போம் என்ற தலைப்பில் நடைபெற்ற விழாவில் பரணி பார்க் பள்ளியைச் சேர்ந்த மழலையர் பிரிவு குழந்தைகள், செய்தித் தாள்களை பயன்படுத்தி 500 காகிதப் பைகளை தாங்களே தயார் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெரியவர்களுக்கும், மற்ற மாணவர்களுக்கும் முன் உதாரணமாக திகழ்ந்து காகிதப் பைகளை செய்து அனைத்து வகுப்பிலும் வழங்கி காகிதப்பை பயன்படுத்த வேண்டுகோள் விடுத்துனர்.  விழாவில் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்ரமணியன் பேசினார். பள்ளி தாளாளர் ஷி.மோகனரெங்கன், செயலாளர் பத்மாவதி மோகனரெங்கன், நிர்வாக அலுவலர் வி.சுரேஷ், முதல்வர் ரி.சேகர், துணை முதல்வர் ரி.மகாலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.