தரங்கம்பாடி, ஜூன் 9- நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உலக கடல் தினம் சனியன்று நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக கடல்சார் உயர் ஆராய்ச்சியாளரும், ஒருங்கிணைப்பாளருமான வீரமணி தலைமையில் சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம், சுற்றுலா விரும்பிகளிடம் ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கடற்கரைப் பகுதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நிகழ்ச்சியில் டேனிஷ்கோட்டை காப்பாட்சியர் வீரமணி, ஈடித் செலின், கடல்சார் ஆர்வலர்கள் வரதராஜன், லாரன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.