திருச்சிராப்பள்ளி, நவ.4- ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் வேளாங்கண்ணி மாவட்ட ஆட்சி யரிடம் கொடுத்த மனுவில் தெரிவித்திருந்ததாவது: மருத்துவர்க ளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை மருத்துவர்க ளை பணியிடமாற்றம் செய்யப் பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பழிவாங்கும் நோக்கத்தோடு பணியிடமாற்றம் செய்திருப்பதை அரசு உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். சேவை நோக் கத்தோடு பொதுமக்களுக்கு பணி யாற்றக் கூடிய அவர்களது மருத்துவ பணி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு தொடர்ந்து தேவைப்படுவதால் அவர்கள் இங்கேயே பணியாற்ற வேண்டும். என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஸ்ரீரங்கம் பகுதிக்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என அவர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார். டிஆர்ஓவிடம் மனுவை கொடுத்த போது மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்டக்குழு உறுப்பினர் வீர முத்து, ஒன்றிய கமிட்டி உறுப்பினர் கள் அயன்ராஜ், சுந்தரம், பொன் மலை ராமதாஸ் ஆகியோர் உடனிருந்தனர். இதே போல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் செவி லிய உதவியாளர்கள் நலச்சங்க செயலாளர் சுரேஷ் ராஜா தலை மையில் செவிலிய உதவியாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் செவிலியர் உதவியாளர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.