tamilnadu

img

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பெண்கள் போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன்.10- புதுக்கோட்டை வடக்குராஜ வீதியில் உள்ளது அரசு டாஸ்மாக் கடை. நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் அகற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவினால் மேற்படி கடையும் அகற்றபபட்டிருந்தது. இதனால் அப்பகுதியில் வசிப்போர் நிம்மதியடைந்தர். இந்நிலையில் அந்த சாலை மாவட்டச் சாலையாக மாற்றப்பட்டு மீண்டும் கடை திறக்கப்பட்டது. இந்த டாஸ்மாக் கடையினால் பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றம் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர்.  கடையை அகற்றக் கோரி அப்பகுதியினர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் பலனில்லை. இதனால், ஆத்திரமடைந்த பெண்கள் திங்கள்கிழமை திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

;