tamilnadu

img

ஒப்புக் கொண்ட கோரிக்கைகளை மோடி அரசு நிறைவேற்றுமா ஆளுநர் மாளிகையை முற்றுகையிடுவோம்!

     திருச்சிராப்பள்ளி, ஆக.30 -

     ஐக்கிய விவசாயிகள் முன்னணி கோரிக்கை விளக்க மாநில மாநாடு திருச்சியில் செவ்வாய்க் கிழமை நடை பெற்றது. மாநாட்டிற்கு ஐக்கிய விவ சாயிகள் முன்னணி ஒருங்கிணைப் பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.  

      மாநாட்டில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி தேசியக் குழு உறுப்பினர் ஹன்னன்முல்லா, தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் பி.எஸ்.மாசிலாமணி, எஸ். குணசேகரன், சாமி.நடராஜன், திருச்சி  மாநகர் மாவட்டச் செயலாளர் கார்த்தி கேயன், அகில இந்திய விவசாயிகள் மகாசபை சந்திரமோகன், காவிரி டெல்டா பாசனதாரர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கே.வி.இளங்கீரன், ஐக்கிய விவசாயிகள் முன்னணி தேசிய குழு உறுப்பினர் வெங்கையா, விவசாயிகள் பாதுகாப்பு சங்க அக்ரி.கா.பசுமைவளவன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க என்.சந்திரபோஸ், வீ.அமிர்தலிங்கம், வாழ்க விவசாயி இயக்கம் எப்.மேரி லில்லிபாய், பி.எஸ்.காளிராஜ், தற்காப்பு விவசாயிகள் சங்க கி.வே.பொன்னையன், களஞ்சியம், பொன் விவசாயிகள் சங்க பொன்னுத்தாய், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க அ.பாஸ்கர், விவசாயிகள் விடு தலை முன்னணி கே.செல்வராஜ் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.

    13 மாதங்களாக போராடிய விவ சாயிகளில் 780 பேர் உயிரிழந்த நிலை யில், ஒன்றிய அரசு கோரிக்கைகளை தீர்ப்போம் என்று ஒப்புக் கொண்டது. அதன்படி போராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது.

     ஆனால் 28 மாதங்கள் கடந்தும்,  கோரிக்கைகள் எதையும் நிறைவேற்றா தது மட்டுமல்ல; மின்சார சட்ட  த்திருத்த மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத் தில் தாக்கல் செய்துள்ளது மோடி அரசு. முந்தைய வேளாண் சட்டங் களை கார்ப்பரேட்களுக்கு உறுதி யளித்தபடி, மறு வடிவில் மீண்டும் கொண்டுவர முயற்சிக்கிறது.

    எனவே ஐக்கிய விவசாயிகள் முன் னணியின் அகில இந்திய அமைப்பு முடிவு செய்தபடி அனைத்து மாநி லங்களிலும் போராட்டத்தை வலுப் படுத்துவோம்; அதன் ஒரு பகுதியாக சென்னை ஆளுநர் மாளிகை முன்பு நவம்பர் 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் தமிழ்நாடு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் முற்றுகை போரா ட்டம் நடத்துவது; இதில் பல்லாயிரம் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  

    முன்னதாக ஐக்கிய விவசாயி கள் முன்னணி திருச்சி ஒருங்கிணைப் பாளர் அயிலை சிவசூரியன் வர வேற்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.நடராஜன் நன்றி கூறினார்.