tamilnadu

இரண்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே புகுந்தது

திருநெல்வேலி, ஏப்.7 -நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ளமேக்கரை கிராமத்தில் இரண்டு யானைகள் தங்கள் குட்டிகளுடன் புகுந்தது. இதே பகுதியில் உள்ள ஒருமாந்தோப்பில் உள்ள மரங்களை நாசம் செய்தது, அங்குள்ள தென்னை மரங்களையும் சாய்த்தது.இதனை தொடர்ந்து வடகரை ஜாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான தோப்புக்குள் புகுந்த யானைகள் அங்கு அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலிகளை மிதித்து நாசம் செய்தன. இப்படி தொடர்ந்து யானைகள் வந்து அட்டகாசம் செய்வதால் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மட்டுமன்றி பொதுமக்களும் கடும் அச்சம் அடைந்துள்ளனர். எனவே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

;