tamilnadu

இருவேறு சாலை விபத்தில் சிறுமி உட்பட 3 பேர் பலி

தஞ்சாவூர், ஏப்.26-தஞ்சாவூர் அடுத்த திட்டை பகுதியை சேர்ந்தவர் லோகநாதன்(52), கேபிள் டிவி ஆப்பரேட்டர். இவர் வெள்ளிக்கிழமை காலை காரில் தஞ்சை மார்க்கெட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவருடன் அவர் அதே பகுதியை சேர்ந்த சாந்தி(45) என்பவரும் வந்துள்ளார். பொருட்களை வாங்கிய பின் அவர்கள் காரில் ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகிலிருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் லோகநாதன் மற்றும் சாந்தி சம்பவ இடத்திலேயே பலியாகினார். இது குறித்து தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். தார்ச்சாலை முறையாக அமைக்காமல், ஜல்லி பெயர்ந்து இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதே போல் அம்மாபேட்டை அருகே சேர்மாநல்லுார் ஆதிதிராவிடர் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் குணஸ்ரீ (3), குணஸ்ரீயின் தாத்தா நாகராஜன் (65). வியாழக்கிழமை இரவு நாகராஜன், பேத்தி குணஸ்ரீயை இருசக்கர வாகனத்தில் சென்றனர். சாலியமங்கலம் அருகே சென்ற போது லாரி மோதியது. இதில் குணஸ்ரீ சம்பவ இடத்திலேயே இறந்தார். நாகராஜன் பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;