tamilnadu

img

30 கிராமங்களை இணைக்கும் தஞ்சை கல்லணைக் கால்வாய் ஆற்று நடைபாலத்தில் விரிசல்

தஞ்சாவூர், ஏப்.30-தஞ்சாவூர் அருகே கல்லணைக் கால்வாய் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட "நடைபாலம்" எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், அப்பகுதியில் புதிய பால த்தை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.தஞ்சாவூர் அருகே காசவளநாடு தெக்கூர் கிராமத்தின் நடுவே கல்ல ணைக் கால்வாய் ஆறு செல்கிறது. இதன் மேற்கு பகுதி, கிழக்குப் பகுதியிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி மக்கள் பயன்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் ஆற்றின் குறுக்கே ஒரு மீட்டர் அகலத்தில் நடைபாலம் கட்டப்பட்டது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், நடூர், கொல்லங்கரை, மருங்குளம், வடக்குப்பட்டு, வேங்கராயன்குடிக்காடு உள்ளிட்ட 30 கிராம மக்கள் இந்த பாலத்தை தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், தெக்கூர் கிராமத்தில் மேற்கு பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களின் உடலை தகனம் செய்ய கிழக்குப் பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு செல்ல இந்த நடைப்பாலத்தின் வழியாக செல்ல முடியாததால் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு சுடுகாட்டுக்கு இன்றளவும் சென்று வருகின்றனர். ஆற்றில் வெள்ளம் செல்லும் போது, இந்த பாலத்தின் வழியாக சென்ற பலர் நிலைதடுமாறி ஆற்றுக்குள் விழுந்து உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாலத்தில் ஆங்கா ங்கே விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் இருபுற மும் உள்ள இரும்பால் ஆன தடுப்பு கைப்பிடிகள் உடைந்து எவ்வித பாது காப்பும் இல்லாமல் உள்ளது. இந்த பாலத்தை அகற்றி விட்டு நான்கு சக்கர வாகனங்கள் செல்லக் கூடிய வகையில், புதிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என தெக்கூரை சி.கண்ணன் மற்றும் அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

;